மச்சானே மச்சானே- ஆச
வச்சானே வச்சானே.
பாதையில்லா ஊருக்கு
பரிசம் போட வந்தானே
ராகமில்லா பாட்டெடுத்து
ராத்திரி வந்து சொன்னானே
பூவிருக்கு பொழுதிருக்கு
பொண்ணும் கூட காத்திருக்கு
கண்ணடிச்சி ஜாட காட்டி
கம்மாக் கர போறவரே
தினம் போடும் புதிரேனோ
தினுசாத்தான் விடைய சொல்லு
கண்ணாடும் சதிராட்டம்
காலாடும் பொம்மலாட்டம்
வழிப்பேச்சு வேனாம் போய்யா
விழியசைவும் போகும் பொய்யா
பிடிச்சிருந்தா சொல்லு மச்சான்
பெசையாத வீனா மனச மச்சான்.
''..மச்சானே மச்சானே- ஆச
ReplyDeleteவச்சானே வச்சானே.
பாதையில்லா ஊருக்கு
பரிசம் போட வந்தானே..''இனிய வாழ்த்து சசி.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் நன்றிங்க.
Deleteநாட்டுப்புற பாடல் நன்று அழகாக காதலை சொல்கிறது
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteவாடி என் பூ வசந்தமே
வாழ்கை முழுசும் உன்வாசமே...
தேடி நீபடிச்ச தெம்மாங்கு
தேனா இருக்குதடி தென்றலா வீசுதடி...
ஊருமணம் மனக்குதடி
உள்மனசு துடிக்குதடி
ஆயுசுக்கும் வாழ்த்துறனே
அழகாதான் நீ பாடுற புள்ள....:)
மிக மிக மிக ...மகிழ்ச்சிங்க உங்க பின்னூட்டம் படிக்கும் போது என் மகன் பக்கத்தில் இருந்தான் என்னம்மா சிரிக்கிறீங்க எனக்கேட்டான் பாருங்க எந்த அளவிற்கு மலர்ந்த முகத்தோடு தங்கள் வரிகளைப் படித்திருப்பேன் என்று.
Deleteகிராமத்து பைங்கிளியின் காதல் கவிதை நன்றாக இருக்கிறது சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅப்புடிப் போடு புள்ள அருவாள :) வெட்டொண்டு துண்டு ரெண்டு
ReplyDeleteமுடிஞ்சுது கத .யாருகிட்ட இதெல்லாம் முறம் கொண்டு புலிய
விரட்டின இனமாக்கும் !!.............:) அருமையான கவிதை வரிகள்
மனம் சொக்கிப் போனதடி என் தோழி ..வாழ்த்துக்கள் மேலும்
தொடரட்டும் இது போன்ற இன்பக் கவிதை வரிகள் .
தங்கள் பின்னூட்டமும் மிக்க மகிழ்வளித்தது தோழி. பக்கத்தில் இருந்திருந்தால் பேசிப்பழகி பரிமாறி இருக்கலாம் உணர்வுகளை.
Delete
ReplyDeleteபாடலாக பாடிப் பார்த்தேன்... அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...
பாடி ரசித்தமைக்கு நன்றி சகோ.
Deleteகிராமத்தில் பிறந்தாலும் வெளிப்படையாக பேசும் இந்தப் பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சசி!
ReplyDeleteகிராமத்து பெண்கள் மனதுக்கு பிடிக்கும் விதமாகத்தான் இருப்பார்கள் போல நன்றிங்க.
Delete//பெசையாத வீனா மனச மச்சான்.//
ReplyDeleteஉணர்வின் வெளிப்பாடு அருமை.
தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteதினம் போடும் புதிரேனோ
ReplyDeleteதினுசாத்தான் விடைய சொல்லு
வெட்டொன்று --துண்டு இரண்டு .......
ஆமாங்க சரியா சொன்னீங்க நன்றிங்க.
Deleteவரிகள் நாட்டுப்புற பாடல் போன்று உள்ளது :)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகிராமத்துப் பெண்ணு மயங்கிப்பாடும் பாடல் சொக்க வைக்கின்றது.
ReplyDeleteநன்றி சகோ .
Delete// பாதையில்லா ஊருக்கு
ReplyDeleteபரிசம் போட வந்தானே
// - நல்ல மச்சான். கவிதை அருமை!
அட பாட்டாவே எழுதிடீங்கலா நல்ல இருக்கு நல்ல இருக்கு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
Deleteதென்றல் தீட்டும் தேன்கவியைத்
தேடி வந்து படிக்கின்றேன்!
மன்றல் காணும் இன்பத்தை
வழங்கும் இந்தப் பாட்டென்பேன்!
அன்றும் இன்றும் என்றென்றும்
அருமைத் தமிழே நல்லினிமை!
உன்றன் பயணம் தொடருகவே
உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ReplyDeleteதமிழ்மணம் 7
அருமை....வாழ்த்துக்கள்
ReplyDeleteராகமில்லா பாட்டெடுத்து....
ராத்திரி வந்து சொன்னானே.....
பூவிருக்கு பொழுதிருக்கு
பொண்ணும்கூட காத்திருக்கு.....
எங்களின் ஏக்கங்கள் உங்களின் வரிகள்....
நாட்டுப்புறப் பாட்டு மனதிற்கு தாலாட்டு!
ReplyDeleteபாட்டு நன்று. மச்சானின் பாடு நன்றில்லை
ReplyDeleteகிராமத்து அழகியே !
ReplyDeleteகவிதையாலேயே சொன்னாயே
உன் எண்ணத்தில் உள்ள எண்ணங்களை
இப்படித்தான் பளிச்சுன்னு சொல்லணும் புள்ள
இல்லையின்னா சொல்லாத காதலும்
காணாமலேயே போய்விடும் யாருக்கும் தெரியாமலேயே
உரக்கத்தான் சொன்னாயே நான் உறங்கும் முன்னே
எனக்கும் புடிச்சிருக்கு உன்ன விரைவில் வருவேன்
என் கண்ணே உன் கண்ணெதிரின் முன்னே...
பரிசமும் போட்டு உன்னை ஊரறிய கைபிடிக்கவே...
என்னதொரு அருமை சசி கலா வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும் தங்களின் திறமை வளர....
கிராமத்து மணம் கமழும் பாட்டு....
ReplyDeleteவாழ்த்துகள்.
kiraamiya vaasam.!
ReplyDeletearumainga...!
அருமை அருமை
ReplyDeleteநாங்களே மயங்கிவிட்டோம்
மச்சான் நிச்சயம் பாட்டைக் கேட்டு
மயங்கித்தான் இருப்பார்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 10
ReplyDelete