Saturday 26 May 2012

நிலவும் நீயும் ..!


உன் பார்வை பட்டு
பயந்தோடி என்னில்
ஒளிந்த வார்த்தைகள்
எல்லாம் விரல் வழி
வழிந்து கவிதைகளாயின !

உருபெற்ற கவிதையை
ரசிக்கிறாய் ...
உருவமாய் உன் முன்
நிற்கும் என்னோடு
இருக்கும் நேரத்தை குறைத்து
எனை ரணப்படுத்துகிறாய்  !

காற்றிலும் என்ன மாயம்
உன்னிடத்தில் தென்றலாகவும்
எனைத் தீண்டுகையில்
புயலாகவும் மாறுகிறதே !

சூரியனுக்கும் கருணையில்லை
விழி நீரையும் உறிஞ்சிவிட்டு
எனை நெருப்பாய் சுடுகிறதே !

நிலவிற்கும் பொறாமையோ
எனை வீட்டினுள்
புழுங்கவிட்டு ...
உன்னோடு வெளியில் உலவுகிறது !

21 comments:

  1. காற்றிலும் என்ன மாயம் | உன்னிடத்தில் தென்றலாகவும் | எனைத் தீண்டுகையில் | புயலாகவும் மாறுகிறதே! -அருமையான வரிகள். படித்ததும் மனதில் உட்கார்ந்துடுச்சு. ரசிக்க வைத்த காதலில் நனைந்த கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வருக வசந்தமே ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  2. வாவ் அற்புதம்!

    ///உன்னோடு வெளியில் உலவுகிறது !///

    நிச்சயமா இந்த வரியை எதிர்பார்க்கவில்லை நான்!

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து ரசித்தமை என்னில் மிகுந்த சந்தோசத்தை அளித்தது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  3. நிலவு உன்னோடு வெளியில் உலவுகிறதோ! எல்லா வரிகளுமே ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. காதல் புழுக்கம்.கவிதை வேர்க்கிறது சசி !

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோதரி அவ்வளவு வெயில் ....புழுங்க தானே செய்யும் .

      Delete
  5. Mrs.Sasi all are Nice.. Kadhalai alagai sonnadhukku nandrigal pala

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. மிக இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. ''...உன் பார்வை பட்டு
    பயந்தோடி என்னில்
    ஒளிந்த வார்த்தைகள்
    எல்லாம் விரல் வழி
    வழிந்து கவிதைகளாயின ...'
    அவை சிறந்தவையாயின. அருமை சகோதரி ரசித்தேன். இனிய வாழ்த்துடன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. உங்கள் உள்ளத்தில் பொங்கிய வார்த்தைகள் விரல் வழியே வழிந்து பேனா முனைக் கவிதைகளாக நிற்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. கவிதையை ரசித்தேன். தங்களை வாழ்த்த சரியான சொற்களைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. //உருபெற்ற கவிதையை
    ரசிக்கிறாய் ...
    உருவமாய் உன் முன்
    நிற்கும் என்னோடு
    இருக்கும் நேரத்தை குறைத்து
    எனை ரணப்படுத்துகிறாய்//

    காயமும் புலப்படுகிறது, காதலும் கவிபாடுகிறது.........
    அழகு சகோ

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. காற்றிலும் என்ன மாயம்
    உன்னிடத்தில் தென்றலாகவும்
    எனைத் தீண்டுகையில்
    புயலாகவும் மாறுகிறதே

    ஆஆ அருமை அக்கா தமிழ் சினிமாவில்
    பாடலாசிரியைகள் மிக குறைவே நீங்கள் முயர்ச்சித்தால்
    வெற்றியுண்டு (நகை சுவை இல்ல அக்கா உண்மை)

    ReplyDelete