Friday 11 May 2012

காதல் அழிவதில்லை...!


கைகளில் மலரேந்தி அவள்வரக்காத்திருந்தான்.மூன்றுவருடங்கள் கூடவேபடித்தும் காதலைச் சொல்லாமல்;மனதில் வைத்துப் பூஜித்து;இன்று எப்படியாவது சொல்லிவிடும் முடிவோடு நின்றவனை நோக்கி அவள் வந்து கொண்டிருந்தாள்.

    அவனைக் கடந்து சென்றவள் 'ஒருநிமிடம்'என்ற அவன் சத்தம்கேட்டு ஆச்சரியத்தோடு ''என்னையா''என்றாள்''.."உங்களைத்தான்" மரியாதை தானாக தொற்றிக்கொண்டது.மௌனம் மொழியாக;கையிலிருந்த பூச்செண்டை நீட்டினான்.''எதுக்கு'' அவள் கேட்குமுன் அவசரம் அவசரமாய் ''ஜ லவ் யூ'' என்றவனை அமைதியாய் பார்த்து ''என்னையா''என்றவள்';பூச்செண்டை வாங்காமல் அருகில் இருந்த சிமின்ட் இருக்கையில் போய் அமர்ந்தாள்.

    அவனுக்கு உச்சிமுதல் பாதம்வரை வேர்த்துப்போக;''வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'' என்ற குரலுக்கு பதிலின்றி அருகில் போய் அமர்ந்தான்.

      ''எதவச்சி என்ன காதலிக்கிறதா சொல்றீங்க! அழகா;அறிவா;அன்பா;பணமாஇதில எதுவுமேு எங்கிட்ட இல்ல,என்னோட தன்மானத்த நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கவும்முடியாது.என்னப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.என்னோட அம்மா என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்கணு தெரியுமா?நான் வேலைக்குப் போனாதான் என்னோடஇரண்டு தங்கச்சியும் படிச்சி கரையேற முடியும்கிறது தெரியுமா?அதெல்லாம் விடுங்க,எனக்கு ஆக்ஸிடன்ல ஒரு கால் போயிடுச்சிங்கிறது தெரியுமாசட்டென்று சேலையைக் மெதுவாய் உயர்தி கணுக்காலைக் காட்டினாள்-மரக்கால்!


அதிர்ச்சியில் உறைந்து போனஅவன் எதுவும் பேசவில்லை;கொஞ்சநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் பதிலேதும் கூறாமல் எழுந்து நடந்தான் .அனாதையாய்கிடந்த பூச்செண்டை எடுத்து;நெஞ்சோடணைத்து ஏங்கி,ஏங்கி அழ ஆரம்பித்தாள்.அவள் அழுகுரல் அவனுக்குக்கேட்டது.வேகமாய் இடம் விட்டு அகன்றான்.
ஏன் வந்தான்,எதற்காக இதுவரை துங்கிக் கிடந்த பெண்மையை எழுப்பி விட்டான்!அவளை அறியாமல் கண்கள் அவனைத்தேடியது.நாள் வாரமாக அவன் வரவில்லை .இன்று கடைசி நாள்-ஒருவருக் கொருவர் பிரியா விடையைக் கண்ணீரோடு சொல்லும் நாள்.அவனை மட்டும் காணவில்லை.கனத்த இதயத்தோடு   கலங்கின கண்களோடு வீட்டுக்கு அவன் நினைவை சுமந்து புறப்பட்டாள் .

காதல் அழிவதில்லை,மனதைமட்டுமே அதுபார்க்கும் எல்லாமே பொய்யாஆண்டவா அவன் இதை சொல்லாமலே இருந்திருக்கக் கூடாதா?நிம்மதியும் பறிபோய் ,என்ன வாழ்க்கை...நிலைகுலைந்து வீட்டினுள் நுளைந்தவள் திகைத்தாள் .அழகான காதல் பார்வையோடு-அவன்!....உண்மைக் காதல் உலகுள்ளவரை வாழும்!!வாழவைக்கும்!!!

34 comments:

  1. காதல் உண்மையாய் இருந்தால் அது மனதை மட்டுமே பார்க்கும். புறக்காரணிகள் பெரிதில்லை அதற்கு! சிறு‌கதை எளிமையான நடையில் அழகான கருத்துடன் ரசிக்க வைத்தது. பாராக்களுக்கிடையில் கொஞ்சம் கேப் கொடுத்திருந்தால் இன்னும் படிக்க இலகுவாக இருந்திருக்கும் தென்றல்!

    ReplyDelete
    Replies
    1. வருக வசந்தமே தங்கள் உடன் வருகையும் ரசித்து பாராட்டியது கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  2. அவள் தன்னோட குறையச் சொன்னப்புறமும் தேடி வந்திருக்கான்னா அவன் நல்லவனாத்தான் இருக்கணும். காதலோட Valueவை தெளிவா எடுத்துச் சொல்லிட்டீங்க! Superb!

    ReplyDelete
    Replies
    1. நிரூ மா வாங்க உற்சாகமூட்டும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் மா . நன்றி .

      Delete
  3. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete
  4. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete
  5. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete
  6. ஒரு சஸ்பென்ஸ் கதையை படித்தது போல உணர்ந்தேன். கவிதையில் தான் அசத்துகிறீர்கள் என்றால், கதையிலும் ‘’ உண்மைக் காதல் உலகுள்ளவரை வாழும்!!வாழவைக்கும்!’’ என முடித்து அசர வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரிகளே எனக்கு உற்சாகமாய் அமைகிறது .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. கதையா...அதுவும் அசத்தலான காதல் கதை.இயல்பாய் வாழ்வியலோடு கலந்து அறிந்த கதைதான் சசி.உணர்வோட எழுதியிருக்கீங்க.
    பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்களோடு வந்து பரவசப்படுத்தும் சகோவிற்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. அட ..கதை..நல்லாருக்கே..வாழ்த்துக்கள தொடர்ந்து சிறுகதைகள் எழுத..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து கூறிய சகோவிற்கு வணக்கத்துடன் எனது நன்றி .

      Delete
  9. ooooo சில நாட்கள் இடை வெளி அக்கா மன்னிக்கவும் உங்கள்
    கவிதை எப்படியோ கதையும் அப்படியே சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. தாமதமானாலும் தவறாமல் வந்ததற்கு நன்றி சகோ .

      Delete
  10. சகோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து கூறிய சகோவிற்கு வணக்கத்துடன் எனது நன்றி .

      Delete
  11. உண்மைக் காதல் உலகுள்ளவரை வாழும்!!வாழவைக்கும்!!!

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. உண்மைக் காதல் உலகுள்ளவரை வாழும்.வாழவைக்கிறது.வாழ்த்துவோம்.நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து கூறிய சகோவிற்கு வணக்கத்துடன் எனது நன்றி .

      Delete
  14. நல்ல கதை.வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  15. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. அருமையான எழுத்து நடை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  16. Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  17. அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தங்களுக்கும் வாழ்த்துக்கள் .

      Delete
  18. அருமை
    அம்மா தின வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றிங்க .

      Delete
  19. அடடா அருமையான சிறு கதை கடைசியில் வைச்சீங்க பாருங்க ட்விஸ்ட் கலக்கல்

    ReplyDelete
  20. கதையில் உள்ளபடி நடைமுறையில் இருக்கவேண்டும் என்றுதான் நம் விருப்பம். கதை நன்று.சினிமா கிளைமாக்ஸ் போல் நிறைவாக உள்ளது.

    ReplyDelete