உழைக்கும் வர்க்கத்தை காணோமடி
எங்கும் கண்டால் சொல்வாயடி.
நத்தைபோல் முதுகில் சுமந்திடுவார்
நடந்தே தொழிலிசை பாடிடுவார்
மாதமிருமுறை வந்திடுவார்
மழுங்கிய பொருளை கூர்தீட்டிடுவார்.
யாதும் ஊரென்றே சென்றிடுவார்
யாரும் கேட்க பணி செய்திடுவார்.
எஞ்சியது அவர்கென்றும் உழைப்பே
எடுப்பு சாப்பாடும் சிலநாள் மறுப்பே.
வானக் குடையின் கீழ் வாழ்ந்திடுவார்
வறுமை ஆடையையே சூடிடுவார்...
இவர்களை...
தேடித் திரியும் கண்கள் தாராளம்
தேங்கிக் கிடக்கும் பொருளோ ஏராளம்
களை எடுத்த ஒரு கூட்டம்
காணாமல் போன சங்கதியாய்
இவர்களும்...
களவு கொடுத்திருப்பாரோ...?
உழைப்பை நூறு நாள் வேலைக்கு...?
அருமையான கவிதை தென்றல் சசிகலா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஉலக ஓட்டத்தில்
ReplyDeleteஉடலுழைப்பு
உதவாதென
முடிவெடுத்தனரோ
அப்படியும் இருக்கலாம்.
Delete// களை எடுத்த ஒரு கூட்டம்
ReplyDeleteகாணாமல் போன சங்கதியாய்
இவர்களும்... //
நிச்சயம் இருக்கலாம்...
உண்மை தானோ ?
Deleteஎன்ன செய்யலாம்....?
ReplyDeleteஎங்கே தேடுவது ?
Deleteநம்மிடமும் யூஸ் அண்ட் துரோ கலாச்சாரம்
ReplyDeleteபரவி விட்டதால் நமக்கும் கூர் தீட்டும் அவசியம்
இல்லாது போனதால் அவரும் காணாது போய்விட்டார்
என் நினைக்கிறேன்
படமும் அதற்கான பதிவும் அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.
Deleteநூறு நாள் வேலை.....
ReplyDeleteகொஞ்சம் நீயா நானாவில் கேட்டேன்...நாட்டுப் பிரச்சனையை...
அலசுதல் நன்று.
வேதா. இலங்காதிலகம்.
இந்த கவிதையை படித்து விட்டு நண்பர் ஒருவர் நீயா நானா பார்த்திங்களா என்றார் அப்போதே எனக்கு தெரியும் நூறு நாள் பற்றிய விவாதம் நடந்தது.
Deleteகாலமாற்றம் அறிவாயடி சசியே
ReplyDeleteகாகமும் கரைவதை காணோமடி..!
மாற்றங்கள் வேண்டி மனிதனின் பயணம்
இதில் எங்கே தேடுவது பழமையை ..!
அழகிய கவிதை வாழ்த்துக்கள்
பழமையை எங்கே தேடுவது உண்மை தான்.
Deleteவணக்கம்
ReplyDeleteசசிகலா
படித்தேன் ரசித்தேன் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகவிதை அழகு, வாழ்த்துக்கள்
ReplyDeleteஉழைப்பை மதித்த அவர்களை, பிச்சைகாரனைவிட கேவலமாக மதித்த நம் சமூகத்தையும் சேர்த்து சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
உழைக்கும் வர்க்கத்தை கேவலமாக பார்க்கும் சமூகம் இருக்கத்தான் செய்கிறது என்ன செய்வது ?
Deleteஉழைத்தவர்களை வாழ்த்துவோம்.
ReplyDeleteநாள்வீதம் புதிது புதிதாக பொருட்கள் விற்பனைக்கு வர வாங்குகின்றோம்.கத்தி ஷாப்னரும் வீடுகளுள் வந்துவிட்டது.
கத்தி ஷாப்னரா ? புதிதாக இருக்கே.
Deleteபுத்தி மழுங்கிப்போனவர்களுக்கு கத்தி தீட்டிப் பயனில்லை என்று காலம் உரைத்த சேதி கேட்டு கலங்கிப்போய் காணாமற்போனார்களோ அவர்கள்! மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் சசிகலா.
ReplyDeleteஅப்படியும் இருக்குமோ ?
Deleteகளை எடுத்த ஒரு கூட்டம்
ReplyDeleteகாணாமல் போன சங்கதியாய்
இவர்களும்...
களவு கொடுத்திருப்பாரோ...?
உழைப்பை நூறு நாள் வேலைக்கு...
-------
அருமை...
மனம் தொட்ட கவிதை.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅப்ப வெயிட் பண்ணுங்க.. நூற்றியோராவது நாள் வருவாரு..
ReplyDeleteவருவாங்களா ?
Deleteவாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகளவு கொடுத்திருப்பாரோ...?
ReplyDeleteஉழைப்பை நூறு நாள் வேலைக்கு...?//
எங்கள் வீட்டுக்கு அருமையான காய்கறி கொடுத்து வந்த அம்மாவையும் காணவில்லை.
100 நாள் வேலைக்கு போய் விட்டார்கள்.
100 நாள் வேலை உழைப்பவர்களை சோம்பேறியாக்கிவிட்டது போலும்.
Deleteஅன்புத் தங்கை சசிகலா...
ReplyDeleteநலமா?
அருமையான கருவுண்ட கவிதை...
உழைத்து உழைத்து போதிய ஊதியம் கிட்டாது
குழைந்து போனாரோ...
எங்கெங்கு காணினும் கண்களில்
மணியாய்த் தெரியும் உழைக்கும் வர்க்கம் வாழவேண்டும்...
அருமையான கவிதை சகோதரி
வாழ்த்துக்கள்..
நலமே அண்ணா. நீங்க மற்றும் வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க ?
Deleteகத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று யாரவது அவர்களுக்கு சொல்லி கொடுத்திருப்பார்களோ என்னவோ?
ReplyDeleteநல்லா சொன்னாங்க போங்க.
Deleteஇந்த வார நீயா நானாவில் விவாதிக்கப்பட்ட இந்த நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை மையாக வைத்து அழகாக உழைப்பின் நுகர்வை கவிதை மூலம் தந்திருக்கிறீர்கள்... அருமை..
ReplyDeleteஅந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவேயில்லங்க. உண்மையாகவே சானை பிடிப்பவர்களை தேடிக்கொண்டு எழுதியது.
Deleteதேடித் திரியும் கண்கள் தாராளம்
ReplyDeleteதேங்கிக் கிடக்கும் பொருளோ ஏராளம்
களை எடுத்த ஒரு கூட்டம்
காணாமல் போன சங்கதியாய்
இவர்களும்...
களவு கொடுத்திருப்பாரோ...?
உழைப்பை நூறு நாள் வேலைக்கு...?//
அற்புதம்! இரசித்தேன்!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநன்றிங்க ஐயா.
ReplyDeleteஉழைப்பிது ஊரில் உதவுமோ வென்று
ReplyDeleteபிழைப்பது போயிற் றகர்ந்து!
அருமை! சிறப்பான சிந்தனைக்க கவிதை தோழி!
வாழ்த்துக்கள்!
என் வருகைதான் வழமைபோல் தாமதம்...:(
உழைப்பாளி சுமக்கின்ற உலகமிது அவன் ஓய்ந்து விட்டால் உலகம் சாய்ந்துவிடும் கூர் தீட்டிய புத்தி உங்களிடம் இருக்கும் போது கத்தி தீட்டுபவனை எதற்காக தேடுகிறீர்கள் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் எங்கும் பார்க்கலாம்
ReplyDelete