Thursday 14 March 2013

எல்லாம் தேடல் தான் !



தீ எடுத்து மாலை தொடுத்து
நன்மை குணம் சூடுமோ ?
காற்று பிடித்து பையடைத்து
உருகொடுத்தல் ஆகுமோ ?
வானவில் பிடித்து வந்து
ஆடை நெய்தல் ஆகுமோ ?
பாசத்தை தொலைத்துவிட்டு
உறவு தேடலாகுமோ ?
எல்லாம்  தேடல் தான்
வரவு செலவு அறியாமல்.

பகலது இரவு தேடும்
இரவதை நிலவு தேடும்
நிம்மதி இதயம் தேடும்
கனவுதனை நினைவு தேடும்
தேடியது கிடைப்பினது வெற்றி
நினைப்பது  பொய்ப்பின் தோல்வி
எதுவும் நமதே என்று
கேட்க உரிமையுண்டா ?
கேள்வியுடனே வாழ்வும்.

14 comments:

  1. வாழ்வில் தேடல் அவசியம் !

    // எதுவும் நமதே என்று
    கேட்க உரிமையுண்டா ? //

    அழகிய வரிகள்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமை...

    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி...
    அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி...
    ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
    இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்...


    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...
    இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி...?

    ReplyDelete
  3. தேடியது கிடைப்பினது வெற்றி
    நினைப்பது பொய்ப்பின் தோல்வி//
    உண்மைதான்

    ReplyDelete
  4. தேடியதெல்லாம் கிடைப்பதில்லை
    கிடைத்ததெலாம் நமதுமில்லை
    வாடுவதும் தேடுவதும் கூடுவதும்
    கூடுவிட்டுப் போகையிலே நமது
    பிரிவெழுதி ஓடுவதும் மீண்டும்
    புதுவுறவு தளி்ர்ப்பதுமே வாழ்க்கை!

    ReplyDelete
  5. தோழி...

    காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு கண் மூடும்வரையும் தேடல், தேடல், தேடல்தான்.

    தேடல் இல்லா வாழ்வு வாழ்வு மூடல்!

    //எதுவும் நமதே என்று
    கேட்க உரிமையுண்டா ?//
    இன்று உன்னுடையது நாளை இன்னொருவருக்குச் சொந்தமானது என்று கீதையே சொல்கிறதே...

    சிறந்த கவிதை. அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தேடல் உள்ளவரை தான்
    வாழ்வில் நாடுதல் இருக்கும்...
    அழகாக சொல்லியிருகீங்க . தங்கை சசி....

    ReplyDelete
  7. எல்லாம் தேடல் தான் !

    தேடித் தொடுத்த அருமையான வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பாசத்தை தொலைத்துவிட்டு
    உறவு தேடலாகுமோ ?//

    அருமையான வரிகள்.
    தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை.
    தேடல் உள்ள உயிர்களுக்கே நாளும் பசி எடுக்கும் என்ற பாடல் இருக்கிறது என நினைக்கிறேன்.(இன்னிசை பாடி வரும் )

    ReplyDelete
  9. தேடிக்கொண்டே இருக்கிறோம்! இறக்கும் வரையில்! அருமையானகவிதை!

    ReplyDelete
  10. வாழ்க்கையே ஒரு தேடல்தான்!அருமை சசிகலா

    ReplyDelete
  11. தேடல் தொடர்ந்தால் தான் வாழ்க்கையில் விறுவிறுப்பே!

    ReplyDelete
  12. தேடல் அருமை........
    தொடர்ந்தால்தான் இனிமை.

    ReplyDelete