Friday 3 October 2014

மீதமாக..

 
எண்ணக்கலவையில்
விழுந்த எறும்பாக...
எம்பி எம்பி தவித்து
மீளமுடியா ஞாபக
தீவுக்குள்ளேயே தள்ளப்படுகிறேன்.
இரவெது பகலெது
அறியமுடியா...
அமானுஷ்யம்.
பசிக்குணவாக
பார்வையையும்.
தனிமைக்குணையாக
நினைவையையும்
மட்டுமே பருகிப் பருகி
காத்திருக்கிறேன்.
பார்வையாளனே பகிர்ந்ததும்
புரிந்ததும் போக
மீதமுள்ள காதலை  மட்டும்
ஏன் விட்டு வைத்திருக்கிறாய்.?

8 comments:

  1. அன்புள்ள திரு.சசிகலா அவர்களுக்கு,
    வணக்கம். ‘ மீதமாக.. கவிதை அருமை.

    ‘ பார்வையாளனே பகிர்ந்ததும்
    புரிந்ததும் போக
    மீதமுள்ள காதலை மட்டும்
    ஏன் விட்டு வைத்திருக்கிறாய்.?’

    .-நன்றாக இருக்கிறது...பாராட்டுகள்.
    எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  2. எண்ணக்கலவையில்
    விழுந்த எறும்பாக...
    வண்ணக்கலவையாய்
    வடித்த ஓவியம் அருமை.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  3. எண்ணக் கலவையில் இறைத்த கவியோவியம் சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  4. எண்ணக்கலவையில்
    விழுந்த எறும்பாக...
    எம்பி எம்பி தவித்து..nanru...nanru....
    Vetha.Langathilakam.

    ReplyDelete
  5. கவிதை அருமை வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ‘பார்வையாளனே பகிர்ந்ததும்
    புரிந்ததும் போக
    மீதமுள்ள காதலை மட்டும்
    ஏன் விட்டு வைத்திருக்கிறாய்.?’

    மிக அருமையாக இருக்கிறது...பாராட்டுகள்.

    ReplyDelete