கோபத்தின் உச்சம் எதுவென்று
கேட்பாய்...
ஊடலுக்கும் கூடலுக்குமான
தொடர்பரியாதவனா நீ..
நாணத்தின் நளினத்தை
ருசிக்கத் தெரிந்தவன் நீ..
நூலிழைப் பிரிவையும்
நேசமெனும் ஊசியால்
கோர்க்கத்தெரிந்தவன் நீ..
நூதனத் திருடனே காதலின்
நுணுக்கத்தை கற்றவனே
என்னிடத்தில் உன் அடமும்
அழிச்சாட்டியமும்..
சிறுபிள்ளையின் பிரியமாகிப்போனது.
அருமையான காதல் கவிதை.
ReplyDeleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteஅருமையான கவிதை தோழி!
ReplyDelete