Saturday 25 October 2014

நேசக்கோர்வை !

கோபத்தின் உச்சம் எதுவென்று
கேட்பாய்...
ஊடலுக்கும் கூடலுக்குமான
தொடர்பரியாதவனா நீ..

நாணத்தின் நளினத்தை
ருசிக்கத் தெரிந்தவன் நீ..


நூலிழைப் பிரிவையும்
நேசமெனும் ஊசியால்
கோர்க்கத்தெரிந்தவன் நீ..

நூதனத் திருடனே காதலின்
நுணுக்கத்தை கற்றவனே
என்னிடத்தில் உன் அடமும்
அழிச்சாட்டியமும்..
சிறுபிள்ளையின் பிரியமாகிப்போனது.



4 comments:

  1. அருமையான காதல் கவிதை.

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை தோழி!

    ReplyDelete