ஆரவார பேச்சு கேட்டுக்கோடி
முந்தி ஓடும் சனத்தப்பாரு
முழக்கமிடும் கோசத்தக்கேளு
முன்ன பின்ன சாடிகிட்டு
முகத்த நல்லா கோணிக்கிட்டு
கூட கும்பிடு போட்டுகிட்டு
கூட போகும் (ஆட்டு)மந்தையப்பாரு...
வெட்டத் துளிர்க்கும் முருங்கையாட்டம்
வேட்டிக் கரைக்கொரு கட்சியாட்டம்
கூலி கொடுத்து தலைக்குந்தான்
கூட்டம் சேர்க்கும் நாளுந்தான்
வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
ReplyDeleteநமக்கு என்ன வேலை அங்கே..!
ஆமாங்க....வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.
Deleteவெள்ளிக்காசு சிரிக்குமிடம்
ReplyDeleteவெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
Vetha.Elangathilakam.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.
Deleteமிக அருமை சசிகலா. //கூடக்கும்பிடு வேண்டாமடி.// இதோடு "சிந்தித்துச் செயல் படடி , பாத்து ஒன் ஓட்டப் போடுடி" இந்த மாதிரி உங்க வார்த்தையில் சேர்த்தா நல்லாயிருக்குமே :)
ReplyDeleteத.ம.2
சிந்திக்கவும் நாம் தான் சொல்லித்தரனுமா ? என்றே அதோடே விட்டுவிட்டேன். நன்றிங்க.
Deleteஉண்மைதான்! நமக்கு கை உழைச்சாத்தான் சோறு! அவர்கள் ஒரு மாதம் கூத்தாடிவிட்டு ஜம்மென்று நாற்காலியில் அமர்ந்து விடுவார்கள்! சிறப்பான கவிதை!
ReplyDeleteமிகச்சரியாக சொன்னீர்கள். வருகைக்கு நன்றிங்க.
Deleteஎன்னமோ போங்க...
ReplyDeleteஏன் என்ன ஆச்சி ?
Deleteஅருமை....
ReplyDeleteநன்றிங்க..
Delete
ReplyDeleteவணக்கம்!
குரங்காட்டம்! கூத்தாட்டம்! கொள்ளையிடும் ஆட்டம்!
மரமாட்டம் போன்றுமனம் ஆட்டம்! - இரவாக
நாட்டை இருட்டாக்கும் ஆட்டம் பல! எல்லாம்
கோட்டை கொடுக்கும் கொழுப்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றாக அழகாக சொன்னீர்கள் ஐயா.
Deleteவழக்கம் போல நல்லா இருக்குங்க..
ReplyDeleteநன்றிங்க.
Deleteஉணரவேண்டும் மக்கள்! தேர்தல் கூத்தினை கவிதையாய் வடித்தமை சிறப்பு சசிகலா.
ReplyDeleteஆமாங்க உணர வேண்டும் மக்கள்.... நன்றிங்க.
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஅருமை சசிகலா.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உண்மையை தெள்ள தெளிவாக சொல்லும் கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
என்ன ஆச்சு பா? உடல்நிலை ஏதும் ச்ரியில்லையா அல்லது நல்ல செய்தி ஏதும் நடப்பதற்கான ஏற்பாடா என் போலும் உன் அண்ணன்களுக்குத் தகவல் சொல்லக்கூடாதா? இரண்டுமாத மௌனம்? விரைவில் பதிவிட வேண்டுகிறேன் - அன்பு அண்ணன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
ReplyDeleteஅண்ணா மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா. என்னையும் காணவில்லையே என்று தேட பதிவுலகில் தங்களைப்போன்ற உறவுகள் இருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். அண்ணா முன்பு வீட்டில் இருந்தேன் ஆதலால் பதிவிட முடிந்தது. இப்போது அலுவலகம் செல்வதால் நேரமின்மை தான் காரணம் வேறொன்றுமில்லை அண்ணா.. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன். மிக்க மகிழ்ச்சியும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.தங்கள் நலனையும் அறிய ஆவல் அண்ணா.
ReplyDelete