பாவை முகம் சேமிப்பில்
பதிந்த தடம் நினைவினிலே
வர்ணிக்க வார்த்தையுடன்
வடிவமைப்பை தேடுகிறேன்.
சொட்டுச்சொட்டாய்
பூ நனைய, சொக்கவைத்த
அந்த முகம்..
சொப்பனத்தில் எனையெழுப்பி
தேட வைத்த அந்த முகம்.
கிளையோடி காய் தழுவி
இலையாடி இடம்பெயர்ந்து
அருகம்புல்லில் படுத்துறங்கி
அழகாய் தொலைந்த பனிமுகமே.
தேடலென ஓடுகிறோம்
தேவி உனை ரசிப்பதில்லை.
உறங்கவைத்து ஓடியாடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்.
பனிமலரே உனை பார்த்திருக்க
பகலவனும் வந்து விட
ஒளி நிழலில் உடன் மாய்ந்த
உன் நினைவைத் தேடுகிறேன்.
அழகிய சிந்தனை...
ReplyDeleteரசித்தேன்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Delete//பனிமலரே உனை பார்த்திருக்க பகலவனும் வந்து விட
ReplyDeleteஒளி நிழலில் உடன் மாய்ந்த உன் நினைவைத் தேடுகிறேன்.//
நினைவலைகளின் அழகான தேடல் .... பாராட்டுக்கள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteநினைவலைகள் ரசித்தேன்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅழகாய் தொலைந்த பனிமுகம் தேடல் ரசனை....பாராட்டு.
ReplyDeleteEniya vaalththu....
Vetha.Elangathilakam.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ. தகவலுக்கு மிக்க நன்றி.
Deleteகிளையோடி காய் தழுவி
ReplyDeleteஇலையாடி இடம்பெயர்ந்து
அருகம்புல்லில் படுத்துறங்கி
அழகாய் தொலைந்த பனிமுகமே.
அழகு மிளிரும் கவிதை..!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஉன் நினைவைத் தேடுகிறேன்.
ReplyDelete>>
சீக்கிரம் கண்டுப்பிடி சசி.
காலைல எழுந்து பனியை பிடிச்சி வையுங்க அக்கா.
Deleteபகலவனின் வரவால் அழகாய்த் தொலைந்ததோ பனிமுகம்...
ReplyDeleteஅருமையான சிந்தனை!
அழகிய கவிதை!
வாழ்த்துக்கள் தோழி!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteரவியால் உருகும் பனிப்பெண்!
ReplyDeleteஆமாங்க.
Deleteமரியான் படம் பார்த்தீங்களா என்ன?
ReplyDeleteஇல்லையே ?
Deletemmmmm...
ReplyDeleterasanai...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteபனிமலரே உனை பார்த்திருக்க
ReplyDeleteபகலவனும் வந்து விட//
அழகான் பனி மலர்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஎப்போதும் போலவே அழகான கவிதை. இப்போதெல்லாம் தினமும் வருவதில்லையே ஏன்?
ReplyDeleteவெளியூர் பயணம் அதிகமாகிவிட்டது.
Delete[[அருகம்புல்லில் படுத்துறங்கி
ReplyDeleteஅழகாய் தொலைந்த பனிமுகமே]]
சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் காலை ஏழு மணிக்கு என் சகோதரர்கள் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடும் பொது...நான் பார்த்து ரசித்ததை மேலே எழுதியுள்ளீர்கள்.
தமிழ்மணம் +7
விளையாட வயது ஒரு தடையில்லையே..
Deleteகிடைக்கும் வரை தேடுங்கள் அக்கா .. நல்ல கவிதை
ReplyDeleteசரிங்க சகோ.
Deleteஅருமை....
ReplyDeleteத.ம. 8