Thursday 9 February 2012

மகிழ்ச்சியான தருணம்

   வலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம்.."லீப்ஸ்டர்" என்ற விருது ஜெர்மானிய நாட்டைச் சார்ந்தது.அதாவது சிறப்பாக வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்கக்கூடிய விருது ஆகும்.அந்த விருதைப் பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்கு பிடித்த வளர்ந்து வரும் ஐந்து வலைப்பதிவுகளுக்கு அதை வழங்க வேண்டும்.இதுவே அதன் மரபு.

         அந்த விருதைப் பெற்ற சகோதரி ஸ்ரவாணி தோழர் மதுமதி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.அதைப் பெற்ற அவர் அவருக்குப் பிடித்த ஐவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா அதன் படி அவர் அவருக்கு சிறந்ததெனப் பட்ட ஐந்து வலைப்பூக்களுக்கு அவ்விருதைக் கொடுத்தார்.அதில் எனது வலைப் பூவும் ஒன்று.நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் என்னை இன்னும் உற்சாகப்படுத்தும் அளவிலே சகோதரர் மதுமதி அவர்கள் 'லீப்ஸ்டர்'எனும் விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சியே.
விருதின் விதிப்படி நான் ஐந்து வலைபதிவுகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா..இதோ அந்த ஐவர்.

  • காதல் கவிதைகளால் மனதைக் கொள்ளை கொள்ளும்

1)சத்ரியன் 
manavili.blogspot.in 

கவிதைகளாலும் சமூக சேவைகளாலும் மனதை வருடுகிற சமூகக்கவிஞன்   


2)Magi Mahendiran
eerammagi.blogspot.in


பகுத்தறிவை பறைசாற்றும்


3)இடி முழக்கம் 
idimulahakkam.blogspot.in 


அனுபவப் பகிர்வுகளை அழகாக பகிர்ந்து கொள்ளும்

4)விமலன் 
vimalann7.blogspot.in 


ஜனரஞ்சக பதிவுகள் தரும்

5)விச்சு
alaiyallasunami.blogspot.in 

          தோழர்களே.. இவ்விருதினை பெற்றுக்கொண்டு அதை தங்கள் வலையில் பொருத்திய பின்பு விருதின் மைய அம்சமாக நீங்கள் உங்களுக்கு பிடித்த் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
           எனக்கு இவ்விருதினைக் கொடுத்த சகோதரர் மதுமதி அவர்களுக்கு நன்றியையும் நான் கொடுத்த ஐவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
நன்றி வணக்கம்..
-------------------------------------------------------------------------------------------------
அன்புடன்..

சசிகலா
-----------------------------------------------------------------------------------------
இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தூரிகையின் தூறல் செல்லவும்.
-----------------------------------------------------------------------------------------

22 comments:

  1. குறுகிய காலத்திலேயே விருதினை வென்ற தென்றலுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இன்னும் பல விருதுகள் கிடைக்க்ட்டும்னும், தொடர்ந்து நல்ல படைப்புகள் தரணும்னும் வாழ்த்தறேன்.

    ReplyDelete
  2. விருது பெற்றமைக்கும்,மற்ற பதிவர்களுக்கு வழங்கியுள்ளதற்கும் வாழ்த்துகள் .

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழி !
    தங்கள் புகைப்படம் இட்டு ஒரு சிநேக
    பாவனையை ஏற்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. சசி...உங்களுக்கும் வாழ்த்து.வாங்கிக்கொண்டவர்களுக்கும்கூட !

    ReplyDelete
  5. மிகக் குறுகிய காலம் என்றாலும்
    அனைவராலும் கவனிக்கத் தக்க
    அருமையான பதிவுகளைக் கொடுத்த தாங்கள்
    இவ்விருதைப் பெறுவது
    மிகப் பொருத்தம்
    தங்களுக்கும் தங்கள் மூலம்
    இவ் விருதினைப் பெறுகிறவர்களுக்கும்
    மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கணேஷ் அவர்களே
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  7. திருமதி bs sridhar அவர்களே
    வருகையும் வாழ்த்தும் மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது மிக்க நன்றி .

    ReplyDelete
  8. வணக்கம் ஸ்ரவாணி அவர்களே
    தங்கள் வருகையையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் மனமார்ந்த நன்றி சகோ .

    ReplyDelete
  9. ஹேமா ..
    வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி .

    ReplyDelete
  10. ரமணி ஐயா..
    தங்கள் ஆசிர்வாதம் என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன் .

    ReplyDelete
  11. Best wishes SASI.. THANKS TO YOU, MATHUMATHI & GOD.. YOU GOT ALWAYS BEST THINGS FROM THEM.

    ReplyDelete
  12. எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும் என் தோழி , அவளுக்கு கிடைத்த முதல் மரியாதையை எனக்கு பரிசளித்த மகிழ்ச்சியில் இருக்கிறாள், என் பணிக்கு கிடைத்த அவளது பரிசு எனது பொக்கிஷம்...

    ReplyDelete
  13. குறுகிய நாட்களானாலும் நிறைவான பதிவுகள் அல்லவா! விருது பெற்றதற்கும் ஏற்றவர்களுக்கு வழங்கியதற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  14. மோகன் ....
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .
    எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. தோழர் மகி .....
    உடன் பிறந்தவர்களே திரும்ப் பார்க்காத இந்த காலத்தில் தங்கள் சேவையே எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் .

    ReplyDelete
  16. கீத மஞ்சரி ...
    தென்றலுக்கு மங்களகரமாய் தங்கள் வருகையும் வாழ்த்தும் எனது மனமார்ந்த நன்றி சகோதரி .

    ReplyDelete
  17. மளிகைக் கடையில பொட்டலம் மடிச்சு வர்ற பேப்பரைக்கூடப் படிப்பேன்னு நீங்க வலைச்சரத்துல சொன்னதைப் படிச்சதும் ரொம்ப சந்தோஷம் எனக்கு- என்னைப் போல இன்னொரு ஜீவனான்னு. வலைப்பூவோட புது வடிவம் நல்லாவே இருக்கு மேடம்..!

    ReplyDelete
  18. வணக்கம் தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... மறக்காமல் எழுத முயற்சிக்கவும்...

    நன்றி....

    www.sangkavi.com

    ReplyDelete
  19. நன்றி சசி...உங்களுக்கும் வாழ்த்து.

    ReplyDelete
  20. விச்சு
    நன்றிங்க .

    ReplyDelete
  21. சசி,

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும், வழங்கியமைக்கு நன்றிகளும்.

    (சமீபத்தில் ஊருக்குச் சென்று வந்த காரணத்தால் கொஞ்சம் வேலைமிகுதியால், வலைப்பூக்கள் பக்கம் சென்று படிக்க இயலாமல் போனது. இன்று கண்டேன். நன்றி.)

    ReplyDelete