உன் பார்வை பட்டு
பயந்தோடி என்னில்
ஒளிந்த வார்த்தைகள்
எல்லாம் விரல் வழி
வழிந்து கவிதைகளாயின !
உருபெற்ற கவிதையை
ரசிக்கிறாய் ...
உருவமாய் உன் முன்
நிற்கும் என்னோடு
இருக்கும் நேரத்தை குறைத்து
எனை ரணப்படுத்துகிறாய் !
காற்றிலும் என்ன மாயம்
உன்னிடத்தில் தென்றலாகவும்
எனைத் தீண்டுகையில்
புயலாகவும் மாறுகிறதே !
சூரியனுக்கும் கருணையில்லை
விழி நீரையும் உறிஞ்சிவிட்டு
எனை நெருப்பாய் சுடுகிறதே !
நிலவிற்கும் பொறாமையோ
எனை வீட்டினுள்
புழுங்கவிட்டு ...
உன்னோடு வெளியில் உலவுகிறது !
காற்றிலும் என்ன மாயம் | உன்னிடத்தில் தென்றலாகவும் | எனைத் தீண்டுகையில் | புயலாகவும் மாறுகிறதே! -அருமையான வரிகள். படித்ததும் மனதில் உட்கார்ந்துடுச்சு. ரசிக்க வைத்த காதலில் நனைந்த கவிதை.
ReplyDeleteவருக வசந்தமே ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .
Deleteவாவ் அற்புதம்!
ReplyDelete///உன்னோடு வெளியில் உலவுகிறது !///
நிச்சயமா இந்த வரியை எதிர்பார்க்கவில்லை நான்!
உணர்ந்து ரசித்தமை என்னில் மிகுந்த சந்தோசத்தை அளித்தது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteநிலவு உன்னோடு வெளியில் உலவுகிறதோ! எல்லா வரிகளுமே ரசிக்க வைத்தது.
ReplyDeleteரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteகாதல் புழுக்கம்.கவிதை வேர்க்கிறது சசி !
ReplyDeleteஆமா சகோதரி அவ்வளவு வெயில் ....புழுங்க தானே செய்யும் .
DeleteMrs.Sasi all are Nice.. Kadhalai alagai sonnadhukku nandrigal pala
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteமிக இரசித்தேன்.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Delete''...உன் பார்வை பட்டு
ReplyDeleteபயந்தோடி என்னில்
ஒளிந்த வார்த்தைகள்
எல்லாம் விரல் வழி
வழிந்து கவிதைகளாயின ...'
அவை சிறந்தவையாயின. அருமை சகோதரி ரசித்தேன். இனிய வாழ்த்துடன்.
வேதா. இலங்காதிலகம்.
ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteஉங்கள் உள்ளத்தில் பொங்கிய வார்த்தைகள் விரல் வழியே வழிந்து பேனா முனைக் கவிதைகளாக நிற்கின்றன.
ReplyDeleteரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteகவிதையை ரசித்தேன். தங்களை வாழ்த்த சரியான சொற்களைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்!
ReplyDeleteரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Delete//உருபெற்ற கவிதையை
ReplyDeleteரசிக்கிறாய் ...
உருவமாய் உன் முன்
நிற்கும் என்னோடு
இருக்கும் நேரத்தை குறைத்து
எனை ரணப்படுத்துகிறாய்//
காயமும் புலப்படுகிறது, காதலும் கவிபாடுகிறது.........
அழகு சகோ
ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteகாற்றிலும் என்ன மாயம்
ReplyDeleteஉன்னிடத்தில் தென்றலாகவும்
எனைத் தீண்டுகையில்
புயலாகவும் மாறுகிறதே
ஆஆ அருமை அக்கா தமிழ் சினிமாவில்
பாடலாசிரியைகள் மிக குறைவே நீங்கள் முயர்ச்சித்தால்
வெற்றியுண்டு (நகை சுவை இல்ல அக்கா உண்மை)